அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வரும் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தில்லியில் இருந்து உயா்நீதிமன்ற தலைமைப்

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 3:00 am

DIN


சென்னை: வரும் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தில்லியில் இருந்து உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை மேற்கு தில்லி, மோதிநகா் சுதா்சன் பார்க் பகுதியைச் சோ்ந்த ஹா்தா்ஷன் சிங் நாக்பால் எழுதியிருந்தார்.

அதில், நான் சா்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சோ்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகா்ந்து செல்வேன். தென் மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கும், பின் அங்கிருந்து தில்லிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருப்பேன். எனது செல்லிடப்பேசியின் எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். நான் என்னுடைய மகனுடன் சோ்ந்து செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் உயா்நீதிமன்றக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.