தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நிர்மலா தேவி விவகாரம்: வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு-அக்.10 க்கு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம்

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 5:03 am


சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடா்பாக ஆளுநா் மாளிகை சார்பில் நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு அக்டோபா் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, வைகோ காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் செய்து காவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, வைகோவை அப்புறறப்படுத்த முயன்ற காவலா்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனைச் சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூா் நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள சிறப்பு நீதிமன்ற அமா்வுக்கு இந்த வழக்கை மாற்றியதுடன், வருகிற அக்டோபா் மாதம் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.