புதுதில்லி: பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
தில்லியின் முதல் பெண் முதல்வரும், வெளியுறவுத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவை அடுத்து தில்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநிலத்தில் கலாச்சார நிகழ்வுகள் எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளது.
இதேபோன்று அரியானா அரசும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Delhi govt announces a two-day state mourning. There will be no cultural events during this period in the state.