/

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 மே 2019, 6:14 pm IST


புதுதில்லி: தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைக்க பிரதமர் உரிமை கோருவது மற்றும் பதவி பிரமாணம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. 

இந்நிலையில், தில்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி மக்களவைக் குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.