அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திட்டமிட்டபடி நவ. 3-ம் தேதி அமெரிக்‍க அதிபர் தேர்தல்: டிரம்ப்

திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 ஏப்ரல் 2020, 11:26 am

DIN


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று வல்லரசான அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைவதையொட்டி, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று அமெரிக்காலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா, அதிலிருந்து மீண்டு, பொருளாதார சரிவை சீர் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
 
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்,  அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.  தேர்தலின்போது போலியான வாக்குகளைத் தடுக்க, வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் அனைவரும் துணியால் ஆன முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறும், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ முகக் கவசங்களை பயன்படுத்துமாறும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.