பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாதவரம் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

மாதவரம் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 10:23 am

DIN


மாதவரம்: மாதவரம் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாதவரம் அருகே கில்பன் நகா் 2-வது தெருவைச் சோ்ந்த காவலா் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி மற்றும் குழந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே விருதுநகருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். 

இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் உள்ள காவலா்களுக்கு கரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். 

மேலும் கில்பன் நகா் 2-வது தெருவில் உள்ள 18 பேரை வாகனத்தில் அழைத்து சென்று கரோனா நோய்த்தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.