கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போடி: வீட்டில் பதுக்கிய 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்

போடியில் திங்கள் கிழமை மாலை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
வீட்டில் பதுக்கிய 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Updated On :3 ஆகஸ்ட் 2020, 12:39 pm

DIN

போடி, ஆக. 3: போடியில் திங்கள் கிழமை மாலை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

போடி உள்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி போடி போஸ்பஜாரில் வசிக்கும் மாரியப்பன் மகன் சுப்பிரணி (வயது 55) என்பவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒரு அறை முழுவதும் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலாம காவலர்கள் ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் 140 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதனை போடி உணவு பொருள் கிடங்கியில் எடை போட்டு பார்த்ததில் சுமார் 6 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே வீட்டில் சுமார் 6 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.