இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சக வீரரால் சுட்டுக்கொலை

மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் பிரிவின் வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தனர

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:12 am

ANI

மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் பிரிவின் வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.

ராய்கஞ்ச் காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுமித் குமார் கூறுகையில், 

இந்தியா-வங்காள எல்லையில் ராய்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாத்துன் கிராமத்தில் 146 வது படையைச் சார்ந்த எல்லைப் பாதுகாப்பு படை காவலர் உத்தம் சூத்ரதர், தனது படையின் ஆய்வாளர் மஹிந்தர் சிங் பட்டி மற்றும் சக காவலர் அனுஜ் குமார் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆய்வாளர் மஹிந்தர் சிங் பட்டி மற்றும் காவலர் அனுஜ் குமார் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு பின், காவலர் உத்தம் சூத்ரதர் தனது தளபதி முன் சரணடைந்தார். இப்போது ராய்கஞ்ச் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.