தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மழையால் எர்ணாகுளத்திற்கு ரூ. 1.22 கோடி இழப்பு

எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் ரூ. 1.22 கோடி மதிப்பிலான வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.

News image
மழையால் எர்ணாகுளத்திற்கு ரூ. 1.22 கோடி இழப்பு
Updated On :8 ஆகஸ்ட் 2020, 9:30 am

ANI

எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் ரூ. 1.22 கோடி மதிப்பிலான வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.

இது குறித்து எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கையில்,

எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் கடலோர கிராமங்களான செல்லனம் போன்ற பகுதிகளில் அதிகளவிலான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.

கொச்சி தாலுக்கா மற்றும் கனயனூர் தாலுக்காவில் 60 லட்சம் மதிப்பிலான வீடு, நிலங்கள் சேதமடைந்துள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் 30 நிவாரண முகாம்களில் 97 குழந்தைகள் உள்பட 852 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எட்டு சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது என கூறினர்.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.