அசாம் : 72 மணிநேரத்தில் திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை
அசாமிற்கு வரும் விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் திரும்புவோராக இருந்தால் தனிமைப்படுத்தல் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
அசாமிற்கு வரும் விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் திரும்புவோராக இருந்தால் தனிமைப்படுத்தல் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் சமிர் சின்ஹா கூறுகையில்,
அசாமிற்கு பணி நிமிர்தமாக வந்து உடனே திரும்பிச் செல்லும் பயணிகளுக்கு இனி தனிமைப்படுத்தல் கிடையாது. அவ்வாறு வருபவர்கள் திரும்ப செல்லும் பயணச்சீட்டைக் காட்ட வேண்டும்.
மேலும் அவர்களுக்கு ரேபிட் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லையென்றால் உடனே செல்லலாம். தொற்று உறுதியானல் கரோனா நோயாளிகளுக்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு அறிகுறி இருப்பின் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும்.
தவறான தகவல் கொடுத்து 72 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அந்த பயணி மீது நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...