தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தேசிய புலன்விசாரணை நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி
Updated On :10 ஆகஸ்ட் 2020, 6:50 am

PTI

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தேசிய புலன்விசாரணை நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜாமின் வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு எந்த ஒரு அடிப்படையுமின்றி கற்பனையில் உருவாக்கப்பட்ட வழக்கு. மத்திய-மாநில அரசுகள் இடையேயான பிரச்சனையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

தேசிய புலன்விசாரணை நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ் நேரடியாக வரும் இந்தச் செயலை குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே செய்துள்ளார் என்பதற்கு முதன்மையான ஆதாரங்கள் இருப்பதாக கூறி அதை சமர்பித்தது.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷின் பங்கு குறித்த ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்த சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.