மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பு:விவசாயிகள் பாதிப்பு

அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயுடன் கஞ்சநாயக்கன்பட்டி கண்மாய் இணையும் பகுதியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமைரைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயுடன் கஞ்சநாயக்கன்பட்டி கண்மாயும் இணையும் பகுதியில் கண்மாய் நீர்ப் பரப்பே தெரியாதபடி ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 11:09 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயுடன் கஞ்சநாயக்கன்பட்டி கண்மாய் இணையும் பகுதியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் விவசாயத்திற்குப் பயன்பட வேண்டிய நீரை உறிஞ்சிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயின் கிழக்குப்பகுதியுடன், அருகிலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கண்மாயும் இணைகிறது. கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியில் ஐந்துமுறை கனமழை பெய்தது.

இதில் கண்மாய்க்கு வரவேண்டிய நீர்வரத்தானது வரத்துக் கால்வாய் முறையாகத் தூர்வாறப்படாததால் தேவைக்கும் குறைவான நீரே கண்மாய்க்கு வந்தது. இந்நிலையில் இவ்விதம் குறைவாக வந்த நீரையும் அங்கு ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் உறிஞ்சிவிடுவதாகவும் இதனால் கண்மாய் நீரை நம்பி இப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட அருப்புக்கோட்டை, இராமசாமிபுரம் மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோடைகாலத்தில் கண்மாய் வற்றிய போது காய்ந்துபோன ஆகாயத் தாமரைகளை எளிதில் அகற்ற முடியுமென்பதால் அப்போதே அகற்றிட மாவட்ட நிர்வாகத்திடம்  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே தற்போது ஆகாயத் தாமரைகள் பெருகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே விவசாயிகள் நலன் கருதி விரைவில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.