மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருப்புக்கோட்டையில் சிவலிங்கத்தில் கண்கள் தோன்றியதாகப்  பரபரப்பு

அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கோவிலொன்றில் சிவலிங்கம் கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்தனர்.

News image
அருள்மிகு ஸ்ரீமத் ஏனாதி நாயனார் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்ட சிவலிங்கம்
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:08 pm

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கோவிலொன்றில் சிவலிங்கம் கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோவிலிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் அருகே தனியாருக்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீமத் ஏனாதி நாயனார் திருக்கோவில் (சிறிய கோவில்) அமைந்துள்ளது.

இங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல சிறப்பு அபிஷேகம், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றதாம். அப்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவலிங்கம் கண்களைத் திறந்து பார்ப்பதுபோல இருந்தது.

இதனால் அப்போது தரிசனத்தில் இருந்த பக்தர்கள் இத்தகவலை அக்கம் பக்கம் கூறினர். இச்செய்தி அதிவேகமாகப் பரவியதால் அக்கோவிலைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்தும் ஏராளமான சிவ பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

அவர்களும் தாங்கள் பார்த்தாகக் கூறவே நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஒருபுறம் பொதுமக்கள் பக்திப்பரவசத்துடன் சிவதரிசனம் செய்து கொண்டிருக்கையில், அப்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததாக மற்றொருபுறம் சில சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே கோவிலில் சிவலிங்கம் கண்களைத் திறந்து பார்த்த செய்தி அருப்புக்கோட்டை நகரில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.