இலங்கையில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகின்றது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று நள்ளிரவு இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்து நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலானது, கன்னியாகுமரி - பாம்பன் இடையே நாளை நள்ளிரவு அல்லது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளனர்.