சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

3 மணி நேரத்தில் பாம்பனைப் புயல் தாண்டும், குமரி இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரை கடக்கும்

பாம்பனுக்கு மிக அருகில் இருக்கும் புரெவி புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து செல்லும், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்கும் என்கிறது வானிலை மையம்.

News image
புரெவி புயல்
Updated On :3 டிசம்பர் 2020, 11:21 am

DIN

பாம்பனுக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து செல்லும், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பாம்பன் அருகே 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் கடந்து செல்லும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.