மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கான்ராட் வெளியிட்ட செய்தியில்,
எனக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 5 நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களது உடல்நிலையை கண்காணித்து, தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.