இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விவசாயிகளின் அழைப்பை ஏற்று டிச.14-ம் தேதி ஆம் ஆத்மி போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளின் அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை டிசம்பர் 14ஆம் தேதி முற்றுக்கையிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 டிசம்பர் 2020, 11:16 am

ANI

தில்லியில் போராடும் விவசாயிகளின் அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை டிசம்பர் 14ஆம் தேதி முற்றுக்கையிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 16வது நாளாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து, மத்திய அரசு நடத்திய பல கட்டப் பேச்சுவார்தைகள் தோல்வியடைந்த நிலையில், அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை அளித்தது. அதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுக்கையிட அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி வெளியிட்ட செய்தியில், 

விவசாயிகள் அளித்த அழைப்பை ஏற்று, மத்திய மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 14 அன்று பஞ்சாப் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை முற்றுகையிடும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.