சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லி எய்ம்ஸில் வேலைநிறுத்தம்: ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க முடிவு

தில்லி எய்ம்ஸில் 2வது நாளாக செவிலியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

News image
தில்லி எய்ம்ஸ்
Updated On :15 டிசம்பர் 2020, 9:23 am

ANI

புது தில்லி: தில்லி எய்ம்ஸில் 2வது நாளாக செவிலியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் திங்கள்கிழமை நண்பகல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் அவசர சகிச்சையில் உள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியா்கள் சங்கத்தினா் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனையடுத்து, தில்லி எய்ம்ஸின் தலைவர், இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், தற்காலிகமாக ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.