குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை கண்டித்து நடந்த தொடர் இருப்பு போராட்டத்தில் - திருமணம் நிகழ்ச்சி
குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆத்துப்பாலத்தில் நடந்து


மதுக்கரை: குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆத்துப்பாலத்தில் நடந்து வரும் தொடர் இருப்பு போராட்டத்தில் இளம் தம்பதியினருக்கு வியாக்கிழமை திருமணம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக கோவை ஆத்துப்பாலம் அருகே இரண்டாவது நாளாக தொடர் இருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் , மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் இருப்பு போராட்டங்களின் இடையே கோவை குனியமுத்தூரை சேர்ந்த அப்துல்கலாம்(24), கரும்புக்கடையைச் சேர்ந்த ரேஷ்மா ஷெரின்(29) ஆகிய இளம் தம்பதியினருக்கு போராட்ட களத்திலேயே திருமணம் நடந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்த திருமணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் புதுமணத்தம்பதிகளும் கையில் பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் புதுமணத்தம்பதிகள், உறவினர்கள் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை குண்டு, எதர்ப்பு பதாகைகளை ஏந்தி திருமணம் செய்து கொண்டது குறிபிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...