கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை

கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

News image
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் வாகன பரிசோதனை
Updated On :5 ஜூலை 2020, 8:00 am

DIN

கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் காவலர்கள் முகாமிட்டு, அனுமதி இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலும், ஓங்கூர் சுங்கச்சாவடியில் டிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் காவலர்கள் தொடர்ந்து வாகன பரிசோதனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் திண்டிவனம் மரக்காணம் பகுதிகளில் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் போது மும்பையிலிருந்து அனுமதியின்றி வந்த ஆம்னி பேருந்தை காவலர்கள்பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.