பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருப்பூரில்  முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின: 100 சதவீத கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரில் வாகனப்போக்குவரத்து இல்லாததால் சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடின. மேலும், மாநகரில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

News image
திருப்பூர் வாகனங்கள் இல்லாததால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் ரயில்வே மேம்பால சாலை
Updated On :5 ஜூலை 2020, 6:46 am

DIN

திருப்பூர்: முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரில் வாகனப்போக்குவரத்து இல்லாததால் சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடின. மேலும், மாநகரில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஜூலை மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

Story image

திருப்பூர் புதிய பேருந்து நிலையம்

இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனப்போக்குவரத்து இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. இதில், பொதுமக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி பகுதி, ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் அதிக அளவிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றும் நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல் துறையினர் இரு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். 

Story image

முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் திருப்பூர் காமராஜர் சாலை

மேலும், குமரன் சாலை, காமராஜர் சாலை, தென்னம்பாளையம் உழவர் சந்தை, பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் பால் முகவர்கள் வாகனங்களில் எடுத்துச் சென்று பால் விநியோகம் செய்து வருகின்றனர். மீன், ஆட்டிறைச்சிக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.150 கோடி வரையில் உற்பத்தி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படங்கள்: எஸ். மணிகண்டன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.