இஸ்ரேல் பாதுகாப்புத்துறை பிரதிநிதியிடம் பேசினார் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு துறை பிரதிநிதியான லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.


இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு துறை பிரதிநிதியான லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.
இதைப்பற்றி அரசு வட்டாரங்கள் தெரிவித்தாவது, “பேச்சு வார்த்தையில் முக்கியமாக லடாக்கில் உள்ள சீன-இந்தியா இடையேயான பிரச்சனைப் பற்றி பேசினர்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்புக் கொள்முதல் திட்டங்கள் குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்தப் பாதுகாப்பு உறவை விரிவு படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா தொடங்கிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து சிங் காண்ட்ஸுக்கு விளக்கமளித்ததாகவும், இந்திய நிறுவனங்களுடன் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வன்பொருள்களின் கூட்டு வளர்ச்சியில் இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனங்களின் அதிக பங்களிப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும்” கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...