இங்கு காஞ்சிபுரம் மாவட்டதிற்குட்பட்ட குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 160க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையில், உணவு, கழிவறை வசதிகள் இல்லை, குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை, தண்ணீர் வருவதில்லை, முறையாக மருந்துகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.