பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆம்பூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி பலி

ஆம்பூர் அருகே கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி உயிரிழந்தார்.

News image
Updated On :18 ஜூன் 2020, 9:36 am

DIN

ஆம்பூர் அருகே கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த பெரியவரிகம் பகுதியில் வசித்துவருபவர் குமரன், இவருடைய பழைய வீடு ஒன்று இடிக்கப்பட்டு புது வீடு கட்டும் பணியில் ஆம்பூர் அடுத்த வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பலராமன் (வயது 57) மற்றும் கட்டடத் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

Story image

அப்போது அங்கிருந்த  சுவர் திடீரென இடிந்து கட்டட மேஸ்திரி மீது விழுந்ததில் அந்த இடத்திலேயே பலராமன் உயிரிழந்தார்.

உமராபாத் காவலதுறையினர்  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவர் இடிந்து விழுந்து இறந்த பலராமனுக்கு மனைவி பெயர் சரளா, மகள் பெயர் ஜெயந்தி, மகன்கள் ராஜேந்திரன், சேட்டு (எ) குமார் ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.