

சீர்காழி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் அதனை மாற்றி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் மின்கம்பிகள் வீடுகளின் மீதும் உரசி கொண்டும், வயல் பகுதிகளில் தாழ்வாகவும் செல்வதால் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் மின் கம்பிகளை சீர் செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடும். எனவே முன் மின்கம்பிகளை மாற்றி தர வேண்டும் என காத்திருப்பு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.