

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே செஞ்சியை அடுத்த கோவில் புறையூர் கிராமத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு காவலருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான காவலர்கள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தோப்பு ஒன்றில் 30 கேன்களில், 1,050 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அங்கிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்து காவலர்கள் எடுத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 4 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.