மானாமதுரை பகுதியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரசந்தை நடைபெறும். அப்போது மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி உள்ளிட்ட பொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மார்ச் மாதம் பொதுமுடக்கம் அரிவிக்கப்பட்டதிலிருந்து மானாமதுரையில் வாரசந்தை வளாகம் மூடப்பட்டது. அதன்பின் வழக்கம்போல் சந்தை நடைபெறும் நாளில் வியாபாரம் செய்ய வந்த விவசாயிகள், வியாபாரிகள் மானாமதுரையில் வைகையாற்றுக்குள் கடை விரித்து வியாபாரம் செய்து வந்தனர். பொருள்கள் வாங்க பொதுமக்களும் ஆற்றுக்குள் அதிகளவில் கூடினர். இவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவேளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கியதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டது. காவலர்கள் இவர்களிடம் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.