கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடி 

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 மே 2020, 6:40 am

PTI


வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் அதிகமான பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை 16,20,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 96,354 பேர் பலியாகியுள்ளனர். 3,82,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிடும்படி ஊழியர்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பாதிப்பால் நாங்கள் 96,354 பேரை இழந்துள்ளோம். அவர்களின் நினைவாக அடுத்த மூன்று நாள்களுக்கு அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கௌவுரவிக்கும் வகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்’ என டிரம்ப் கூறியுள்ளார். 

கரோனா தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டவுள்ள இந்த சோகமான நாளில், அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.