/

தில்லியில் மேலும் 4,001 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 4,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 நவம்பர் 2020, 4:14 pm

தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 4,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 4,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு  3,96,371 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 42 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை  6,604 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 4,824 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 3,56,459 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 33,308 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.