மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலையில் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5972 கன அடியிலிருந்து 6861 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 95.63 அடியாக சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.32டி எம் சி யாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 96.32 அடியாக இருந்தது. மழை அளவு 17.20 மி.மீ இருந்தது.
தற்போது டெல்டா பாசனப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத் தேவை குறைந்துள்ளது. இதனால், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக உடனடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.