/

‘பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு’: பள்ளிக்கல்வித் துறை

நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
பள்ளிக் கல்வித் துறை
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

DIN

நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்தியில்,

“நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கேட்புக் கூட்டத்தின் அறிக்கையை அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்ற முடிவுகளை அரசு தான் எடுக்கும்” என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.