ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு நவம்பர் 5ஆம் தேதி கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்ததாவது,
“உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.