மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொடுமுடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 4 பேர் பலி

கொடுமுடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

News image
விபத்துக்குள்ளான கார்
Updated On :24 நவம்பர் 2020, 1:16 pm

DIN

ஈரோடு: கொடுமுடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரகுநாதன் (வயது 41), மணி என்ற முருகசாமி (50), தாமோதரன்(40), ஆனந்த் என்ற கிருஷ்ணசாமி(35). இவர்கள் நான்கு பேரும் உறவினர்கள். இதில் ஆனந்தனும் தாமோதரனும் சகோதரர்கள்.  இவர்கள் 4 பேரும் வீரணம்பாளையத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை இவர்கள் நான்கு பேரும் தங்களது தொழில் சம்பந்தமாக வீரணம்பாளையத்திலிருந்து கரூருக்கு கொடுமுடி வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கொடுமுடி அருகே பள்ளக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸார் பலியான 4 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.