பலத்த மழை: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் காலை முதல் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்து வருவதால், மாலையில் நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்(கோப்புப்படம்)
சென்னையில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்(கோப்புப்படம்)

சென்னையில் காலை முதல் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்து வருவதால், மாலையில் நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

ஜி.எஸ்.டி. சாலையில் கிண்டி கத்திப்பாரா முதல் விமான நிலையம் வரை பல மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள்து, இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். அலுவலகம்விட்டு வீடு திரும்புவோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com