மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்ராயன் நினைவு தின விழா

திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர். சுப்ராயன் நினைவு நாள் விழா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றம் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செங்கோடில் நடைபெற்ற சுப்ராயன் நினைவு நாள் விழாவில் பங்கேற்றோர்
Updated On :6 அக்டோபர் 2020, 12:48 pm

DIN

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர். சுப்ராயன் நினைவு நாள் விழா நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றம் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள  முன்னாள் முதல்வர் சுப்பராயன் திருவுருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்.செல்வக்குமார், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செங்குன்றம் தமிழ்ச்சங்க பொறுப்பாளர் பொன்.கோவிந்தராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்செங்கோடு நகர தலைவர் தணிகைச் செல்வன், திருச்செங்கோடு மேற்கு வட்டார தலைவர் மூர்த்தி, மல்லசமுத்திரம் வட்டாரத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், திருச்செங்கோடு நகர பொருளாளர் செல்வராஜ், திருச்செங்கோடு நகர பொதுச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தினர், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரமுகர்கள்  சிலைக்கு பூக்களை தூவி மரியாதை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.