தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி.

News image
விக்கெட் வீழ்ந்த்திய மகிழ்ச்சியில் பஞ்சாப் அணி
Updated On :24 அக்டோபர் 2020, 6:15 pm

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் பேட்டிங் குறித்த முழு விவரங்களுக்கு : கிளிக் செய்யவும்

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தனர்.

Story image

இந்நிலையில் 7வது ஓவரில் வார்னர் 35 ரன்களிலும், 8வது ஓவரில் பேர்ஸ்டோவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் மணீஷ் பாண்டே சற்று பொறுமையாக ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு அருகில் சென்றபோது 17வது ஓவரில் மணீஷ் 15, ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் 26 ரன்களுக்கு வெளியேறினார்.

ஜோர்டன் வீசிய 19 வது ஓவரில் ஹோல்டர்(5), ரஷித் கான்(0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது.

பரப்பரப்பான ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய முருகன் அஸ்வினின் 2வது பந்தில் சந்தீப்(0), 3வது பந்தில் கார்க் (3) அடுத்தடுத்து அவுட்டாக, 5வது பந்தில் கலீல் ரன் அவுட்டானார். 

இதன்மூலம், 10 விக்கெட்டையும் கைப்பற்றி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பந்து மீதி இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் ஜோர்டன் மற்றும் அர்ஸ்திப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.