கொடைக்கானலில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழைப் பெய்து வருகிறது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் மிதமான மழைப் பெய்தது வருகிறது.
அதன்பின் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடைக்கானல் மற்றும் செண்பகனுர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வடகவுஞ்சி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து இரவில் பெய்ய ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்தது. இந்த மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் காற்றுடன் அவ்வப்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த மழையால் விவசாய நிலங்களில் அன்றாடப் பணி பாதிப்படைய வாய்ப்புள்ளது. கடந்த மூன்று நாட்களாக தொடர் மழையால் குளிர் அதிகரித்து காணப்படுகிறது.