மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை முன்பு தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.  

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Updated On :2 செப்டம்பர் 2020, 12:09 pm

DIN

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை முன்பு தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.  

கடந்த வாரம் ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு ஆடிப்பூர விழா நடக்கும் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிக்கப்பட்டது. 

இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள பகுதி வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோமாலியா பவன் என்ற அந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர் வியாபார நோக்கில் செயல்பட்டு அதனை மாற்றி அமைக்க முடிவு செய்தார். அதன் முதற்கட்டமாக  ஆண்டாள் கோவில் கோட்டை சுவர் ஆனது இடிக்கப்பட்டது. சுவர் இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சுவர் இடிப்பது நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று ஆண்டாள் கோவில் கோட்டைச் சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட இடம் மீட்கப்பட்டு வானமாமலை ஜீயர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.