பாகிஸ்தான் சுரங்க சரிவில் சிக்கி 6 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் நிலச்சரிவு காரணமாக பளிங்கு சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனர்.


வடமேற்கு பாகிஸ்தானில் நிலச்சரிவு காரணமாக பளிங்கு சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மொஹ்மண்ட் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அகழ்வாராய்ச்சியில் மும்முரமாக இருந்தபோது, சுரங்கம் சரிந்து புதைந்தது.
இந்த சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் அவர்களின் உடல்கள் பளிங்கு சுரங்கங்களின் சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி கதீர் அகமது தெரிவித்தார்.
மேலும் 6 சுரங்கத் தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...