தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோடிற்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
எனக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.