கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக கர்நாடக முதல்வருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், தொடர்ந்து காய்ச்சல் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடியூரப்பாவுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.