சுஷில் சந்திரா
சுஷில் சந்திரா

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கரோனா

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், பல அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com