கரோனா துயரம்: மகாராஷ்டிரத்தில் ஒரே தகன மேடையில் 4 உடல்கள்

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால் 4 பேரை ஒரே தகன மேடையில் எரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஒரே தகன மேடையில் 4 உடல்கள்
மகாராஷ்டிரத்தில் ஒரே தகன மேடையில் 4 உடல்கள்

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் உயிரிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால் 4 பேரை ஒரே தகன மேடையில் எரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.

தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் உள்ள தகன மேடைகளுக்கு கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வருகிறது. 

24 மணிநேரமும் உடல்களை தகனம் செய்தும், எரியூட்டுவதற்காக வரிசையில் உடல்களை வைத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கராத் நகரில் உள்ள ஒரு சுடுகாட்டில் 4 உடல்களை ஒரே தகன மேடையில் எரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பால், தகன மேடைகளுக்கு  பற்றாக்குறை ஏற்பட்டு  பல மாநிலங்களில் இந்த நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com