ம.பி. விபத்தில் பலியான 45 பேரின் சடலங்கள் மீட்பு: முதல்வர்
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியான 45 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாநில முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்துள்ளார்.


மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியான 45 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இதில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணி காலை முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பலியான அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் சிவராஜ் செளகான் கூறுகையில்,
மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 10,000 உடனடியாக தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்குமுன், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...