பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள்:கிருஷ்ணகிரி நீதிமன்றம்

கள்ளக்காதலன் கொலை வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

News image
கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள்
Updated On :23 பிப்ரவரி 2021, 12:46 pm

DIN


கிருஷ்ணகிரி: கள்ளக்காதலன் கொலை வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

பெங்களூரை சேர்ந்தவர் கோபிகா என்ற மமதா தேவி (30). இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே கோபிகாவுக்கும் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் இந்த உறவு நீடித்தது. இந்த நிலையில் கோபிகா விற்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த செவன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கிருஷ்ணாவுக்கும்  கோபிகா விற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கோபிகா, செத்தான், செவத்தானின் உறவினர் சக்திவேல் (20), ஆகியோர் ஒன்று சேர்ந்து 9 12 2017 அன்று, பெங்களூரில் இருந்த கிருஷ்ணாவை வரவழைத்து, கிருஷ்ணகிரி அருகே கொலை செய்கின்றனர்.

இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிகா, செல்வதான், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆர் விஜயகுமாரி, தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வாசித்தார்.

அதில் கோபிகா, செத்தான், சக்திவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தடையங்களை மறைத்ததற்காக செத்தான், சக்திவேல் ஆகியோருக்கு மேலும்  7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.