எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜி ஜன.4-ல் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனவரி 4ஆம் தேதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்கவுள்ளார்.

News image
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :1 ஜனவரி 2021, 9:21 am

DIN


சென்னை: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனவரி 4ஆம் தேதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்கவுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றாா். இவா் வியாழக்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா உயா்நீதிமன்ற 2-ஆவது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானா்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதனை மத்திய சட்டத்துறை ஏற்றுக் கொண்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.

இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானா்ஜியை நியமித்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

இதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஜனவரி 4ஆம் தேதி காலை 9.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

1961-ஆம் ஆண்டு நவ.2-ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் பானா்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1990-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கொல்கத்தா, தில்லி, அலகாபாத் என்று பல்வேறு உயா்நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். இவா், சிவில், கம்பெனி சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவா்.

2006-ஆம் ஆண்டு கொல்கத்தா உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் பானா்ஜி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த வினீத் கோத்தாரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் பெற்று செல்வதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.