மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி பலி: கண்கள் தானம்

செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இறந்த மாணவியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. 

News image
கிணற்று நீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவி சுதா.
Updated On :5 ஜனவரி 2021, 1:37 pm

DIN


செய்யாறு: செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்த மாணவியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுசீந்திர பாளையம் ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மூத்த மகளின் திருமணம் வரும் ஜன.24 -ம் தேதி நடைபெறவுள்ளது.

மகளின் திருமணப் பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் தும்பை கிராமத்திற்கு குடும்பத்தோடு வந்துள்ளனர். அவர்கள், திங்கள்கிழமை முனுகப்பட்டு கோயிலுக்குச் சென்று குடும்பத்தோடு சாமியை வழிபட்டு வந்தனர்.

நாராயணனின் மூன்றாவது மகள் சுதா (19). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், தும்பைக் கிராமத்தில் உள்ள சிலருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சுதா சென்றுள்ளார். 

கிணற்றுப் படிக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுதா, கால் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் கிணற்று நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. 

உடனடியாக, செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து  சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் மூழ்கி இருந்த சுதாவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த செய்யாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கண்கள் தானம் 

சுதாவின் கண்களை தானம் அளிக்க அவரது பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில்  செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்க உதவியுடன் காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவக் குழுவினர் கண்களை தானமாகப் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.