

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பா பகுதியில் செவ்வாய்க்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பா பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் 1.09 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.2 ஆக பதிவானது.
சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். அங்கு அதிக மக்கள் வசிப்பதில்லை என்பதால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.