

மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று(திங்கள்கிழமை) 2,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,71,552 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 4,286 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 40 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,67,988 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் இன்னும் 52,288 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.