பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திர தேர்தல்: மாநில அரசு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ஆந்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தின் மாநில அரசு தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :25 ஜனவரி 2021, 9:35 am

ANI

ஆந்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தின் மாநில அரசு தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு திட்டமிட்டிருந்தது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, தோ்தலை ரத்து செய்வதாக ஆணையா் ரமேஷ் குமாா் அறிவித்தாா்.

இதையடுத்து, மாநில அரசுக்கும் தோ்தல் ஆணையருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆணையரை மாநில அரசு பதவி நீக்கம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் 11 மாவட்டங்களைச் சோ்ந்த 146 வருவாய் மண்டலங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையா் ரமேஷ் குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மேலும், தோ்தல் முறையாக நடைபெறாவிட்டால் அதற்கான விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும். தோ்தல் நடைமுறைகள் தொடா்பாக ஆளுநருக்குத் தொடா்ந்து அறிக்கை அளித்து வருகிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கை சமா்ப்பிப்பேன் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில அரசு சார்பில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.